எனக்குப் பிடித்தமான சில கவிதை
வாசிப்பு
நானொன்றும் நாதசுரம் வாசிக்கவோ
புல்லாங்குழல் வாசிக்கவோ பிரியப்படவில்லை
நூல்வாசிக்கும் ஆசைமட்டும் நாள்தோறும் வளர்கிறது.
கதை கட்டுரை எதுவாயிருப்பினும் மகிழ்ச்சி
சற்றும் முன்தின்ற பசும்புல்லை
ஆசுவாசமாய் அசைபோடும் பசுவைப்போல்
படித்ததை நினைக்க நினைக்க
ஆனந்தம் பிறக்கிறது
நூல் ஒரு விநோதம், படைத்தவன் படைத்ததைச் சொல்லும்
சொல்லாததையும் சொல்லும்
வாசிப்பு
புறத்தில் மறப்பு அகத்தில் விழிப்பு
வாசிப்பு
தனிமைத்தவம் தாய்மடி வானமழை, ஆழ்கடல்,
ஊன்றுகோல், ஞானதீபம், தேவகானம்,
தலைதொட்டு ஆசீர்வதிக்கும் தும்பிக்கை
வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்
என் விருப்பத்திற்குரிய வேப்பமரம்
ஒருகையில் தேநீர், இன்னொரு கையில் புத்தகம்
இதைவிடவா ஒரு வாழ்க்கை.
பொன்மணி வைரமுத்து.
Tuesday, June 22, 2010
Subscribe to:
Comments (Atom)